தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
80களில் ஹிந்தியில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இன்றைக்கு வாத்தி கம்மிங் மாதிரி அன்றைக்கு ஐ எம் ஏ டிஸ்கோ டான்சர் என்று பாடி ஆடித் திரிந்தார்கள் 80ஸ் கிட்ஸ். தமிழில், மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்துள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்தில் வில்லனாக நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் சார்பில் எம்.பி.யாக இருந்தார். மேற்கு வங்கத்தை குலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரது பெயர் அடிபட்டதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று கோல்கட்டாவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். "நண்பர் மிதுன் சக்ரவர்த்தியை பாரதிய ஜனதா கட்சிக்கு மகிழ்வுடன் வரவேற்கிறேன்" என்றார் பிரதமர் மோடி.
மிதுன் பேசும்போது, என்னை சாதுவான பாம்பு என்று நினைத்துவிடாதீர்கள். நான் ராஜ நாகத்தை போன்றவன். ஒருமுறை தீண்டினாலே உயிர் போய்விடும், என அவரது திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்தை, மேடையில் பேசி கைதட்டல் பெற்றார்.