சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! | கேங்கர்ஸ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! |
80களில் ஹிந்தியில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இன்றைக்கு வாத்தி கம்மிங் மாதிரி அன்றைக்கு ஐ எம் ஏ டிஸ்கோ டான்சர் என்று பாடி ஆடித் திரிந்தார்கள் 80ஸ் கிட்ஸ். தமிழில், மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்துள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்தில் வில்லனாக நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் சார்பில் எம்.பி.யாக இருந்தார். மேற்கு வங்கத்தை குலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரது பெயர் அடிபட்டதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று கோல்கட்டாவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டார். "நண்பர் மிதுன் சக்ரவர்த்தியை பாரதிய ஜனதா கட்சிக்கு மகிழ்வுடன் வரவேற்கிறேன்" என்றார் பிரதமர் மோடி.
மிதுன் பேசும்போது, என்னை சாதுவான பாம்பு என்று நினைத்துவிடாதீர்கள். நான் ராஜ நாகத்தை போன்றவன். ஒருமுறை தீண்டினாலே உயிர் போய்விடும், என அவரது திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்தை, மேடையில் பேசி கைதட்டல் பெற்றார்.