'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கி ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படம் அனைத்து உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடித்து உலகளவில் 1300 கோடி வசூலித்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. மார்ச் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் ஆதித்யா தரின் மனைவியும், நடிகையுமான யாமி கவுதம் துரந்தர்-2 குறித்து தனது பிரத்யேக விமர்சனத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், துரந்தர்-2 படத்தை மக்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கப் போகிறது. எனது கணவர் நம்ப முடியாத படங்களை இயக்குகிறார். அவருக்கு அந்த ஆர்வம் உண்டு. நான் ஏற்கனவே துரந்தர் 2வை பார்த்து விட்டேன். அது அசாதாரணமானது என்று தெரிவித்திருக்கிறார்.