என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தென்னிந்திய திரையுலகையும் பாலிவுட்டையும் ஒப்பிடும்போது நட்சத்திர வாரிசுகளின் ஆதிக்கம் அங்கே தான் அதிகம். வருடத்திற்கு ஐந்து பேராவது வாரிசு நடிகர்களாக அறிமுகம் ஆகி வருகின்றனர். அந்தவகையில் லேட்டஸ்டாக மூன்று நட்சத்திர வாரிசுகள் ஒன்றாக இணைந்து ஒரே படத்தில் அறிமுகமாக இருக்கின்றனர். பிரபல இயக்குனர் சோயா அக்தர் தான் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
அமிதாப்பச்சனின் பேரன் அதாவது அவரது மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் மற்றும் ஷாருக்கானின் மகள் சுகானா கான் ஆகிய மூவரும் தான் இந்த நட்சத்திர வாரிசுகள். இந்தப்படம் சோயா அத்தர் எழுதி பிரபலமான ஆர்ச்சிஸ் காமிக்ஸை தழுவி எடுக்கப்படவுள்ளது.