Advertisement

ஜெயா பாதுரி பச்சன்

Birthday
09 Apr 1948 (Age )

ஒரு காலத்தில் பாவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெயா பாதுரி பச்சன். மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், 1948ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி பிறந்த ஜெயா, ஆரம்பகாலத்தில் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். பிறகு புனேயில் உள்ள சினிமா பயிற்சி பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயின்று, 1971ம் ஆண்டு கிட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் படிப்படியாக உயர்ந்து அந்தக்காலத்து சூப்பர் ஸ்டார்களான அமிதாப், தர்மேந்திரா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகர் அமிதாப்பச்சனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்வேதா, அபிஷேக் என இரண்டு வாரிசுகள். இவர்களில் அபிஷேக் பச்சனும் பாலிவுட்டின் பிரபல நடிகராவர். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் மனைவியாவார்.

சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் இருக்கிறார் ஜெயா பச்சன். 2004ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியால் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2012ம் ஆண்டு எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.

பத்மஸ்ரீ, பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் ஜெயா பச்சன்.