1980-90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஷோபனா. மலையாளத்தை சேர்ந்த ஷோபனா, பாலசந்திர மேனன் இயக்கிய ஏப்ரல் 18 என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை துவக்கினார். தமிழில் இவர் நடித்த முதல்படம், கமல்ஹாசனின் ''எனக்குள் ஒருவன்''. தொடர்ந்து தமிழில் இது நம்ம ஆளு, பொன்மனச் செல்வன், சிவா, தளபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமல்லாது ஷோபனா சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட... சென்னையில் தனியாக ஒரு நாட்டிய பள்ளியே நடத்தி வருகிறார். கலைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.