
மனைவியை காப்பாற்ற கணவன் செய்த காரியம்? சிறையில் தவிக்கும் ஜோடிகள்
ரோஜா சீரியலில், அனுவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் ரோஜா கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கில் ஆஜராகும் டைகர் மாணிக்கம் ரோஜாவிற்கு ஜாமீன் கிடைக்க கூடாதென வாதிட்டு வெற்றி பெறுகிறார். மேலும், சாக்ஷி மூலம் ரோஜாவை சிறையில் வைத்தே கொலை செய்ய திட்டமிடுகிறார். இதை தெரிந்து கொண்ட அர்ஜுன் தன் மனைவியை காப்பாற்ற டைகர் மாணிக்கத்தின் சட்டையை கோர்ட்டில் வைத்து நீதிபதி முன்பே பிடிக்கிறார். இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு நாள் சிறைக்காவல் அளிக்கப்படுகிறது. சிறைக்கு செல்லும் அர்ஜூன் அருகில் வேறு சிறையில் தன் மனைவியை எப்படி காப்பாற்ற போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!