'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நடிகர் தர்ஷன் தமிழில் ரஜினி முருகன், கனா, தும்பா, துணிவு ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானர். தர்ஷனுக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தர்ஷன் என நினைத்து சோஷியல் மீடியா போலி ஐடியில் ஒருவருடன் பேசி வந்துள்ளார். அவர்களின் நட்பு படிப்படியாக வளர்ந்து வாட்ஸ்அப் வரை சென்றுள்ளது.
தர்ஷன் தான் என நினைத்த அந்த பெண் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். ஆனால், அதன்பிறகு அந்த பெண்ணின் புகைப்படங்களை மார்ப் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி 2லட்சம் ரூபாய் பணம் கேட்டு மோசடிக்காரன் மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அந்த பெண்ணும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரனையை தொடங்கிய போலீசார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன், வாகித் என்பவர்கள் தான் அந்த போலி ஐடியை உருவாக்கியதை கண்டுபிடித்துள்ளனர். சகோதரர்களான இவர்கள், அந்த போலி ஐடியின் மூலம் அந்த பெண்ணிடம் மாறி மாறி பேசி பணம் மோசடி செய்துள்ளனர் என்பதும் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.




