சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் |

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திர போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 13ம் தேதியன்று வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதில் மாற்றம் வரும் என்ற தகவல் பரவியுள்ளது.
படத்தை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் தியேட்டர்களைத் திறக்கவில்லை. வெளி நாடுகளில் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கும் மக்கள் அதிகம் வரவில்லை. எனவே, படத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருட டிசம்பர் மாதத்திற்கு ஏற்கெனவே சில தெலுங்குப் படங்களை வெளியிட உள்ளார்கள். அதனால், அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் படத்தை வெளியிடலாம் என்றும் தெரிகிறது.
இது குறித்த முறையான அறிவிப்பை படக்குழு உக்ரைன் நாட்டு படப்பிடிப்பிலிருந்து இந்தியா திரும்பி வந்ததும் அறிவிக்கலாம் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.