
கூட்டம் வேண்டாம் : முதல்வருக்கு பார்வதி வேண்டுகோள்
கேரளாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதுவும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பதவியேற்பு விழா அறிவிப்பு பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே தனது மனதில் தோன்றியதை பளிச்சென கூறிவிடும் நடிகை பார்வதி, இந்த பதவியேற்பு விழா அறிவிப்பு வெளியானதும், இந்த விழாவை காணொளி காட்சி வாயிலாக நடத்துமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது : “கேரளாவில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதுடன் கள பணியாளர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டியும் வருகிறீர்கள். இதுபோன்ற சமயத்தில் கிட்டத்தட்ட 500 பேர் கூடும் விதமான பதவியேற்பு விழாவை நடத்துவதன் மூலம், மீண்டும் நோய் தொற்று அதிமாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இறுதிக்கட்ட அபாயத்தில் இருக்கிறோம். இந்தசமயத்தில் அதனால் இந்த விழாவை நேரடியாக நடத்துவது தவறான நடவடிக்கையாகவே அமையும்.. அதை தவிர்த்து, காணொளி காட்சி வாயிலாக நடத்தினால் இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்” என விமர்சனத்துடன் கூடிய வேண்டுகோளை வைத்துள்ளார். பார்வதி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!