பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் மூன்று வருடங்களுக்கு முன் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை வசீகரித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியானது. அதனாலேயே அதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்தனர். ஆனால் முதல் படத்தில் கிடைத்த வெற்றி இரண்டாவது படத்தில் கிடைக்கவில்லை. தவிர கிசுகிசுக்களில் வேறு இருவரும் வசமாக சிக்கிக்கொண்டனர்.
இதனால் இந்த இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் மூன்றவதாகவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனராம், இந்தப்படத்தை பிரபல முன்னை இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை இயக்கி வரும் சுகுமார் அந்தப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக இந்தப்படத்தை துவங்க இருக்கிறாராம்.