பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன் படத்தின் மெகா ஹிட்டுக்குப்பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதை யடுத்து பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடிப்பவர், தனது அண்ணன் செல்வராகவனின் நானே வருவேன் படத்திலும் நடிக்கப்போகிறார்.
இப்படியான நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலாஜிமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக தகவல் தனுஷ். இவர் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த மாரி, தனுசுக்கு பிடித்தமான படம். அதனால்தான் மாரி-2வில் நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. ஆனபோதிலும் தற்போது பாலாஜிமோகன் சொன்ன ஒரு கதை பிடித்து விட மீண்டும் அவருக்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம் தனுஷ். ஆனால் இப்படம் மாரி-3 படமா? இல்லை வேறு படமா? என்பது தெரியவில்லை.




