விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

தமிழ் சினிமாவில் நாட்டியத்திலும் நடிப்பிலும் முன்னணியில் இருந்த பத்மினி, ராகினி சகோதரிகள் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அவற்றில் முக்கியமான படம் 'கொய்தி'. இந்தப் படத்தை முகமத் முகைதீன் இயக்கி இருந்தார். சுரேஷ் என்ற ஹிந்தி நடிகருடன் பத்மினி, ராகினி நடித்திருந்தனர்.
ஹிந்தியில் பெரிய அளவில் வெற்றி பெறாத இந்த படத்தை பத்மினி, ராகினி நடித்திருந்ததால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். படத்திற்கு 'மகுடம் காத்த மங்கை' என்று தலைப்பு வைத்தனர். கே.வி மகாதேவன் இசையமைத்தார், மருதகாசி தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதினார். இங்கும் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் ஹிட்டானது.




