'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

தமிழ் சினிமாவிற்கும் 3டி தொழில்நுட்பத்திற்கும் ராசியே இல்லை. தமிழில் ஒரு சில படங்கள்தான் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. ஆனால் அனைத்து படங்களும் தோல்வி அடைந்தது. 'மைடியர் குட்டிச்சாத்தான்' பெரும் வெற்றி பெற்றபோது ஏவிஎம் நிறுவனம் ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் 3டி படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தது. ஆனால் ரஜினி மறுத்து விட்டார். '3டி தொழில் நுட்பத்தில் படம் எடுத்தால் மக்கள் அந்த தொழில்நுட்பத்தைத்தான் ரசிப்பார்கள் படத்தின் கதையை விட்டுவிடுவார்கள்' என்று கூறிவிட்டார்.
தமிழில் தோல்வியை சந்தித்த மற்றுமொரு 3டி படம் 'தங்கமாமா'. சைமன் வி.குரியன் என்ற மலையாள இயக்குனர் இயக்கினார். அருண் என்ற புதுமுகத்துடன் சசிகலா நடித்தார். நம்பியார் உள்ளிட்ட மேலும் சிலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். 1985ல் வெளியான இந்த படமும் 'அன்னை பூமி' படம் போன்றே தோல்வி அடைந்தது.
பிற்காலத்தில் வெளிவந்த 'அம்புலி' என்ற 3டி படம்தான் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.




