காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

சில காலம் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவிஎம் நிறுவனம், பாரதிராஜா வருகையை தொடர்ந்து அவரது அணியை சேர்ந்தவர்களின் படங்களை ஆர்வமுடன் தயாரித்தது. பாரதிராஜவுடன் 'புதுமைப் பெண்', பாக்யராஜூடன் 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட படங்களை தயாரித்தது. அவைகள் பெரும் வெற்றி பெற்று வசூலையும் அள்ளிக் கொடுத்தது.
அந்த வரிசையில் அப்போது சில வெற்றிப் படங்களை இயக்கிய கங்கை அமரனை வைத்து ஒரு படத்தை தயாரித்தது. அந்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'. இந்த படத்தில் விஜயகாந்த் நாயகனாகவும், ஊர்வசி நாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் சுஜாதா, சுரேஷ், சிவச்சந்திரன், சரத்பாபு, ஜெய்சங்கர், நளினி, சில்க் ஸ்மிதா, உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. இளையராஜா இசை அமைத்திருந்தார்.
படத்தின் தலைப்பை பார்த்து விட்டு ஏதோ அழகான கதை என்று தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு ஏமாற்றம். அது ஒரு வழக்கமான பழிவாங்கும் படமாக இருந்தது. அப்போது இந்தி மற்றும் ஆங்கில படங்களில் வந்திருந்த காட்சிகளை காப்பி அடித்து பல காட்சிகளை வைத்திருந்தார் கங்கை அமரன். இளையராஜாவின் பாடல்களும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.




