ஆர்பி சவுத்ரிக்கு கண்ணீர் மல்க விஜய் இறுதி அஞ்சலி : கதறி அழுத ஜீவாவிற்கு ஆறுதல் | தேவிஸ்ரீ பிரசாத்திற்கு ஜோடி மிருணாள் தாக்கூரா.? | மத்திய சென்சார் போர்ட் புதிய தலைவராக ஷஷி சேகர் நியமனம் | பிரான்ஸிற்கு செல்லும் வாரணாசி குழு | ஜோதிகா, சோனாக்ஷியின் சிஸ்டம் மே 22ல் ரிலீஸ் | சல்மான்கான் படத்தில் வில்லனாகும் பஹத் பாசில் | ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்லி பதிவு போட்ட நடிகை ரூபா மஞ்சரி | ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ? | ஆர்பி சவுத்ரி உடல் சென்னை வந்தது : திரையுலகினர் அஞ்சலி | 'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ் |

'புஷ்பா 2' பட பிரிமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்த விவகாரம், தெலங்கானா மாநில அரசியலிலும், தெலுங்குத் திரையுலகத்திலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த விவகாரத்தில் கைதாகி ஜாமினில் உள்ள படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் போலீஸ் விசரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வருடன் தெலுங்குத் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக ஏற்கெனேவ தகவல் வெளியானது.
இந்நிலையில் தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்ற தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, படுகாயமடைந்த சிறுவன் தற்போது உடல்நலம் தேறியுள்ளதாகவும், இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




