தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

'புஷ்பா 2' பட பிரிமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்த விவகாரம், தெலங்கானா மாநில அரசியலிலும், தெலுங்குத் திரையுலகத்திலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த விவகாரத்தில் கைதாகி ஜாமினில் உள்ள படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் போலீஸ் விசரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வருடன் தெலுங்குத் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக ஏற்கெனேவ தகவல் வெளியானது.
இந்நிலையில் தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்ற தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, படுகாயமடைந்த சிறுவன் தற்போது உடல்நலம் தேறியுள்ளதாகவும், இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.