சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் |
'புஷ்பா 2' பட பிரிமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்த விவகாரம், தெலங்கானா மாநில அரசியலிலும், தெலுங்குத் திரையுலகத்திலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த விவகாரத்தில் கைதாகி ஜாமினில் உள்ள படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் போலீஸ் விசரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வருடன் தெலுங்குத் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக ஏற்கெனேவ தகவல் வெளியானது.
இந்நிலையில் தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்ற தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, படுகாயமடைந்த சிறுவன் தற்போது உடல்நலம் தேறியுள்ளதாகவும், இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.