விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'பராரி'. இதில் ஹரி சங்கர், சங்கீதா நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். ராஜு முருகன் உதவியாளர் எழில் பெரியவெடி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் எழில் பெரியவெடி கூறும்போது : இந்த படத்தின் களமும், கதையும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாதது. வட மாவட்டங்களில் இருந்து பராரியாக பெங்களூரு மாந்தோப்புக்கு வேலைக்கு செல்லும் மக்களை பற்றிய கதை. ஜாதி மோதல், தீண்டாமை பற்றி பேசும் படம். கர்நாடக மக்களும், தமிழ் மக்களும் சகோதரன் சகோதரி போன்று வாழ்கிறார்கள். ஆனால் இங்கும், அங்கும் சிலர் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். படத்தின் 20 நிமிட கிளைமாக்ஸ் ஒவ்வொரு மனிதர்களையும் உலுக்கி விடும். ஜாதி, மதங்களை தாண்டிய மனிதம்தான் ஆகப்பெரிய சக்தி, என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.




