வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

முன்னனி நடிகர்களின் வாரிசுகள் தாங்களும் தந்தையை போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று கிளம்பிக் கொண்டிருக்கும்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இயக்குனராக கிளம்பி விட்டார். திரைப்படம் தொடர்பான படிப்பை வெளிநாட்டில் முடித்தவர் சஞ்சய். இயக்கம், நடிப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் தொழில்நுட்பம் என அனைத்தையும் படித்தார். ஆனால் முதலில் படம் இயக்க விரும்புவதாக அவர் தெரிவித்தவுடன் விஜய் அதற்கு முழு சம்மதம் தெரிவித்ததுடன், யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன். நீயாகவே வாய்ப்பு தேடிக் கொள்ள வேண்டும். நீயாகவே முன்னுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பல முன்னணி நிறுவனங்களிடம் கதை சொன்னார். இறுதியாக லைகா நிறுவனம் சஞ்சயை டிக் அடித்தது. லைகா நிறுவனம் 'இந்தியன் 2' மற்றும் 'விடாமுயற்சி' படங்களில் பிசியாக இருந்தால் சஞ்சய் இயக்கும் படத்தை தள்ளி வைத்தது. இதனால் படமே டிராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் பரவின. சமீபத்தில் சஞ்சய்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம் படத்தை உறுதி செய்தது லைகா.
தற்போது சஞ்சய் படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் யகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். முழு விபரங்களுடன் முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.




