'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
ஹிந்தியில் சைத்தான் படத்தை அடுத்து இரண்டு புதிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜோதிகா. தமிழில் 2021ம் ஆண்டு ரா.சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்த ‛உடன்பிறப்பே' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அண்ணன்- தங்கை செண்டிமென்ட் கதையில் உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான கதை பணியில் ஈடுபட்டிருந்தார் சரவணன். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஹிந்தியிலும் ஜோதிகாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.