இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் தெகிடி. ஜனனி நாயகியாக நடித்த இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தெகிடி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். அதனால் தெகிடி இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. முதல்பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் தொடருவார்கள் என கூறப்படுகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன.