பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா | விஜய் சேதுபதி பட தலைப்பு ‛பக்தா' வா | அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் | இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்? | மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ் | கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? | 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு | கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா |

நடிகை ஸ்ரேயா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் உள்ளே நுழைந்தார். தற்போது வரை படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டாலும் கூட. கதாநாயகியாக நடிப்பதுடன், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடவும் செய்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் அவரிடம் இந்த வயதிலும் எப்படி உடலை இப்படி கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.
ஆனால் ஸ்ரேயாவோ, ஏன் நடிகைகளிடம் மட்டும் இப்படி கேட்கிறீர்கள் ?. எந்த ஒரு தெலுங்கு ஹீரோவிடமாவது இப்படி கேட்டிருக்கிறீர்களா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டார். அந்த நிருபரோ இதை உங்களுக்கான பாராட்டாக எடுத்துக் கொள்ளலாமே என்று சாந்தமாக கூறியுள்ளார். ஆனாலும், “இதுவா பாராட்டு? என்னுடைய நண்பர்கள் சிலர் கூட பெண்களை பார்க்கும்போது வாவ் இரண்டு குழந்தைகள் பெற்றபின்னும் கூட இப்படி அழகாக இருக்கிறாயே என்பது போன்று பேசுகிறார்கள்.. இவையெல்லாம் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக பாராட்டு அல்ல” என்று மீண்டும் தனது கருத்திலேயே பிடிவாதம் காட்டினார்.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, தனக்கான ஒரு பாராட்டு என்பதை புரிந்து கொள்ளாதது ஒரு பக்கம் இருக்க, அந்த கேள்விக்கான பதிலாக இன்னொரு கேள்வியை ஸ்ரேயா கேட்டது அந்த நிகழ்வில் கொஞ்ச நேரம் சலசலப்பையும் ஏற்படுத்தியது.




