தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து ஹிந்தியில் படங்களை இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக மாறியவர் ராம்கோபால் வர்மா. அவரது படங்கள் ரியலிஸ்டிக்காக இருக்கும் என்பதுடன் பல நேரங்களில் சர்ச்சைகளையும் கிளப்பும். இன்னொரு பக்கம் அவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகளும் தங்களது பங்கிற்கு ஏதாவது சர்ச்சையை கிளப்புவதும் வழக்கம். இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தன்னுடைய பி டெக் டிகிரியை முடித்ததற்கான சான்றிதழை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து தற்போது தான் படித்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பெற்றுள்ளார்.
ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் 1985ல் சிவில் இன்ஜினியரிங்கில் பி டெக் படிப்பை முடித்தார் ராம்கோபால் வர்மா. ஆனால் தொடர்ந்து, படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்க விருப்பம் இல்லாமல் சினிமாவில் நுழையும் ஆர்வத்தில் இருந்ததால் தனது டிகிரி சான்றிதழை இதுவரை வாங்காமலேயே இருந்தார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழகத்திற்கு நேரிலேயே சென்று அந்த பட்டத்தை பெற்றுள்ளதுடன் அதுகுறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.