மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் | மங்கத்தா, திரவுபதி 2 மோதல்... மாமன், மச்சான் மோதலா | ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு |

1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் தெலுங்கு படம் கீதாஞ்சலி. இந்த படம் இதயத்தை திருடாதே என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் லண்டனை சேர்ந்த கிரிஜா நாயகியாக நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றதோடு விருதுகளையும் குவித்தது.
படத்தின் நாயகி கிரிஜா அதன்பிறகு மோகன்லாலுடன் 'வந்தனம்' என்ற மலையாளப் படத்திலும், பாலிவுட்டில் துஜே மேரி கசம் படத்திலும் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு கிடைக்காதலால் லண்டனுக்கே திரும்பி விட்டார்.
லண்டனில் பிறந்து வளர்ந்தாலும் கிரிஜாவின் பூர்வீகம் கர்நாடக மாநிலம். 53 வயதான கிரிஜா தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். காந்தாரா பட இயக்குனர் தயாரிக்கும் 'இப்பனி தப்பித இலேயல்லி' என்ற படத்தில் நடிக்கிறார். இதனை அவரது உதவியாளர் சந்திரஜித் இயக்குகிறார்.




