
ரங்கோலியில் பள்ளி மாணவர்களின் கதை
பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வாலி மோகன்தாஸ் கூறியதாவது: தற்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம். சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!