திருமணத்திற்குப் பிறகு படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா | கிங் படத்தை அடுத்து ரொமான்டிக் காதல் கதையில் நடிக்கும் ஷாருக்கான் | தேர்தல் முடிவுக்கு பிறகு துவங்கும் கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு! | மூன்று வேடங்களில் லெஜண்ட் சரவணன்! | தங்க கோவிலுக்கு சென்ற ஹன்சிகா | விஜய்யை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் வினோத் | அரசன் படத்தில் பிரியங்கா மோகன்? | கருப்பு படத்தின் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு | இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளோம் : அக்ஷய் குமார் | மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் துரை கூட்டணி |

கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்த தகவலை அவர்கள் வெளியிட்டதை அடுத்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையாகவும் ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடிகர் கார்த்தி, ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், பெற்றோர்களின் அணிக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நான்கு பேரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று எழுதி இருக்கிறார் கார்த்தி. இதற்கு விக்னேஷ் சிவன் கார்த்திக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதை அடுத்து அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.




