‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், இயக்குனர் மணிரத்தினத்தின் மிகப்பெரிய முயற்சியால் தற்போது திரைப்படமாக வடிவெடுத்து, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. எதிர்பார்த்தபடி இந்த படத்திற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நாவலை கடந்த பல வருடங்களுக்கு முன்பிருந்தே படித்து ரசித்த அதன் வாசகர்கள் இந்த கதை எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு வருகிறார்கள்.
அதேசமயம் இந்த படத்தின் காட்சிகளை படமாக்கிய மணிரத்னம் எடிட்டிங் டேபிளில் அதன் ஒன்லைன் ஆர்டர் வரிசையை அப்படியே கலைத்துப்போட்டு புது வடிவம் கொடுத்தார் என்று இந்த படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் சில புதிய தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது மற்ற படங்களில் வழக்கமாக இடம்பெறுவது போலவே படத்தில் உள்ள கதாநாயகர்கள், கதாநாயகிகளை வரிசையாக அறிமுகப்படுத்தும் விதமாக தான் முதலில் அவர் ஒன்லைன் ஆர்டர் எழுதி இருந்தாராம். ஆனால் அதன்பிறகு கதை துவங்கும்போதே, ஒரு கதைசொல்லியின் உதவியுடன் படத்தை துவங்க வேண்டி இருந்ததால், ஆரம்பத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை மட்டும் முதலில் அறிமுகப்படுத்தி ஆன்லைன் ஆர்டரில் காட்சிகளின் வரிசையை மாற்றினாராம் மணிரத்னம்.
அதுமட்டுமல்ல குந்தவை கதாபாத்திரத்திற்கு என தனி அறிமுக காட்சி வைக்காமல், வந்தியத்தேவன் கதாபாத்திரம் அவரை சந்திக்கும்போது நேரடியாக அவரை அறிமுகப்படுத்துவதாகவும் மணிரத்னம் மாற்றினாராம். மேலும் இந்த கதைக்கு இடைவேளை விடுவதற்கு என எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியும் இல்லாததால் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இடைவேளை விடும் முடிவையும் எடிட்டிங்கின்போது தான் மணிரத்னம் எடுத்தார் என்றும் கூறியுள்ளார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.