தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

காமெடி நடிகரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். கடந்தவாரம் கார்த்தி நடித்து வெளியாகியுள்ள விருமன் படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவதே சிறந்தது என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் இருந்து கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. இதன் பிறகு நான் இந்து கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. மதுரை மீனாட்சி அம்மனின் பெரிய பக்தன். எந்த வேலையை செய்தாலும் கடவுளை வணங்கி விட்டு தான் ஆரம்பிப்பேன் என்று சொல்லி அதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூரி. அதையடுத்து சுதந்திர தின விழாவின்போது மாப்பு குச்சியில் தேசிய கொடியை ஏற்றி விமர்சனங்களுக்கு உள்ளானார் சூரி. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூரி. அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




