
தோல்விகளுக்குப் பதில் சொல்கிறாரா கீர்த்தி சுரேஷ்?
தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வியடைந்தது குறித்து சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அவற்றிற்குப் பதில் தரும் விதமாக சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு அவற்றோடு ,“எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை, கேமரா இருந்தால் மட்டுமே…” என கருத்தும் சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து தோல்விப் படங்கள் என்றாலும் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி மகேஷ் பாபு ஆகியோருடன் நடித்து வருகிறார் கீர்த்தி. தமிழில் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள "சாணி காயிதம்" விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. மலையாளத்திலும் "வாஷி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!