ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

ஹிந்தித் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பாகப் பேசப்படுபவர். இன்று கல்யாணம், விவகாரத்து ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து சில டுவீட்டுகளைப் பதிவு செய்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து செய்தியைத் தொடர்ந்துதான் அவர் இதைப் பதிவிட்டிருக்க வேண்டும்.
அதில், “திருமணங்களின் அபாயத்தை, ஸ்டார்களின் விவகாரத்துதான் டிரென்ட் செட்டராக அமைந்து இளைஞர்களை எச்சரிக்கிறது. கல்யாணம்தான் காதலை சீக்கிரத்தில் கொன்றுவிடுகிறது. திருமணம் என்ற ஜெயிலுக்குள் செல்வதற்கு முன்பு, காதல் எது வரை தொடர்ந்து இருக்கிறதோ அதுவரையில் மகிழ்ச்சியின் ரகசியமாக அது இருக்கிறது.
ஒரு திருமணத்தில் காதல் என்ற கொண்டாட்டம் 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. புத்திசாலிகள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணம் என்பது இருவரின் அபாயமான தகுதிகளை வைத்து அமைதியாக நடைபெற வேண்டும். ஆனால், சுதந்திரமாக விலகுவதால், விவாகரத்து தான் சங்கீத் உள்ளிட்டவைகளுடன் கொண்டாடப்பட வேண்டும். நமது மோசமான முன்னோர்களால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தீய பழக்கம் திருமணம். அது தொடர்ந்து சுழற்சியாக சோகத்தைக் கொடுத்து வருகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்களுக்கு வழக்கம் போல கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.




