சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

ஓடிடியில் இந்த ஆண்டு தன்னுடைய அடுத்தடுத்த இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'டெடி' படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளிவந்து சிறியவர்களையும் அதிகம் கவர்ந்தது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஜுலை மாதம் வெளியாகி அதுவும் நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றது.
கடந்த வாரம் ஆர்யா நடித்து தியேட்டர்களில் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. இந்த வருடம் ஆர்யா நடித்து வெளிவந்த மூன்று படங்களுமே அவருடைய மார்க்கெட் உயரக் காரணமாக அமைந்துவிட்டது.
தன்னுடைய அடுத்த படமாக 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தை ஆர்யா ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இயக்குனர் சக்தி சவுந்திரராசன் கூறுகையில், ‛‛இப்படம் எல்லா ரசிகர்களையும், ஈர்க்கும்படி இருக்கும். தமிழுக்கு முற்றிலும் புதுமையான கதையாக இப்படம் இருக்கும். திரையுலகின் அரிதான முத்து ஆர்யா. இப்படம் ஆர்யாவுக்கு சிறப்பான படமாக இருக்கும். இதுவரை அவர் நடித்திராத பாத்திரத்தில் நடிக்கிறார்,'' என்றார்.