ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் இருந்தார். ஆனால் கடந்தாண்டு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் புயல் வீச செய்தது. நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டன. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டார்கள். அதில் குறிப்பாக நடிகர் சித்திக் மிகப்பெரிய அளவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.. இதனைத் தொடர்ந்து அவரை சங்கத்திலிருந்து நீக்குவதற்கு பதிலாக மொத்தமாக அனைத்து உறுப்பினர்களுடனும் ராஜினாமா செய்தார் மோகன்லால். தற்போது அரசு நியமித்துள்ள தற்காலிக குழு ஒன்று நடிகர் சங்க பொறுப்புகளை கவனித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தலாமா என முடிவு செய்யும் பேச்சுவார்த்தை வரும் ஜூன் 22ம் தேதி நடைபெற இருக்கிறது.
அதேசமயம் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு வர தயாராக இருப்பதாகவும் ஆனால் தேர்தல் நடத்த வேண்டும் என, நடைபெற உள்ள அந்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டால் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதேசமயம் அவரையே தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள சொன்னாலும், இதற்கு முன்பு சங்கத்தில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்களோ அவர்கள் அப்படியே மீண்டும் தொடர வேண்டும் என்பதையும் மோகன்லால் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளாராம். வரும் ஜூன் 22ம் தேதி தான் இது குறித்த முழு விவரம் தெரியவரும்.