
திலீப்பின் இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்த நீதிமன்றம்
அதுமட்டுமல்ல, தன்மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் திலீப். இந்தநிலையில் நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது சிபிஐ வசம் மாற்றவோ வாய்ப்பில்லை என கூறி திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் திலீப் இந்த வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டி, சபரிமலை சென்று வழிபட்டு வந்த நிலையில், அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!