
சர்ச்சைகளுக்கு இடையேயும் சமூக சேவை செய்யும் ஜாக்குலின்
இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் அவர் தற்போது சமூக சேவையில் இறங்கி இருக்கிறார். அது மனிதர்களுக்கானதல்ல விலங்குகள், பறவைகளுக்கானது. கோடை காலத்தில் விலங்குகள், பிராணிகள், பறவைகள் நீர் அருந்த வசதியாக கிண்ணங்கள் மற்றும் மண் கலயங்களில் நீர் நிரப்பி வைக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரும் சிறிய தொட்டியில் நீர் நிரப்பி வைக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஜாக்குலின் வெளியிட்டுள்ள பதிவில், "வெயில் காலத்தில் விலங்குகள் பறவைகளுக்காக உங்கள் வீடுகளின் முன்னால் மண் கலயங்களில் நீர் நிரப்பி வையுங்கள். நீரை தேங்க விடாமல் தினமும் புதிய நீரை நிரப்பி வையுங்கள். இது கோடையில் நீர் இன்றி கஷ்டப்படும் விலங்குகள். பிராணிகள், பறவைகளுக்கு உதவும். நான் இதனை தினமும் செய்ய இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!