இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஹிந்தியில் ரேவதி கதையின் நாயகியாக நடித்துள்ள 'ஆயே ஜிந்தகி' என்கிற படம் தற்போது வெளியாகியுள்ளது. உறுப்புகள் தானம் செய்வதை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில், மருத்துவமனையில் எதிர்பாராமல் இறப்பவர்களின் உறுப்புகளை தானம் செய்ய வைப்பதற்காக அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த குடும்பத்தாரிடம் பேசி சம்மதிக்க வைக்கும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார்.
இந்த படத்தை அணிர்பன் போஸ் என்பவர் இயக்கி உள்ளார். இந்தப்படம் சமூக நோக்கத்துடன் உருவாகியுள்ளதாக கூறி இந்தப்படத்திற்கு தற்போது ராஜஸ்தான் அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் சிலாதித்யா போரா கூறும்போது, “ராஜஸ்தான் அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளதன் மூலம் இந்த படம் இன்னும் நிறைய மக்களால் பார்க்கப்படும். அதன்மூலம் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் இன்னும் அதிக மக்களிடம் ஏற்பட ஒரு வாய்ப்பை ராஜஸ்தான் அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதனால் உரிய நேரத்தில் உறுப்புகள் தானம் கிடைக்காத நிலையில் மடியும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பது உறுதி” என்று கூறியுள்ளார்.