இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

கடந்த 2005ல் ஹிந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பண்டி அவுர் பப்ளி. 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த அபிஷேக் பச்சனுக்கு பதிலாக இந்த இரண்டாவது பாகத்தில் சைப் அலிகான் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த ஹீரோ மாற்றத்திற்கு காரணம் என்று பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே படத்தின் தயாரிப்பாளர் தூம் 3 படத்தை தயாரித்தபோது அதில் நடிப்பது தொடர்பாக அபிஷேக் பச்சனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது தற்போது வரை தீராததால் இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் அபிஷேக் பச்சனுக்கு பதிலாக சைப்பை மாற்றச் சொல்லி விட்டாராம் பட தயாரிப்பாளர்.