ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக, குமரியாக நடித்தார். சின்னத்திரைக்கு வந்தவர் இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்து சீரியல் தயாரிப்பாளராகவும் ஆனார். தலையணை பூக்கள், தாமரை தொடர்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் வாணி ராணி சீரியலும் நிறைவடைய இருக்கிறது.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அன்னக்கிளி சீரியலில் வில்லி அவதாரம் எடுக்க இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தனது கணவர் இசையுடன் இணைந்து நிறம் மாறாத பூக்கள் தொடரை தயாரித்தவர் இப்போது விஜய் டி.விக்காக அன்னக்கிளி தொடரை தயாரிக்கிறார்.
தனது முதல் தயாரிப்பான நிறம் மாறாத பூக்களில் நடிக்காத நீலிமா ராணி, அன்னக்கிளியில் வில்லியாக நடிக்க இருக்கிறார். இதுவரை சீரியல்களில் வராத துர்கா என்ற டெரர் வில்லியாக நடிக்க இருக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.