14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சீரியல் தயாரிப்பிலும், ஒளிபரப்பிலும் மற்ற தொலைக்காட்சிகளை ஒப்பிடும்போது ராஜ் டி.வி பின்தங்கியே இருந்தது. ஆனால் இப்போது ராஜ் டி.வி புதிய தொடர்களை ஒளிப்புவதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.வருகிற 28ந் தேதி முதல் 5 புதிய தொடர்களை ஒளிபரப்புகிறது. இந்த தொடர்கள் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகிறது.
இரவு 7 மணிக்கு கடல் கடந்து உத்யோகம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. பெற்றவர்களை இங்கு தவிக்க விட்டவிட்டு வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை பற்றிய தொடர். 7.30 மணிக்கு கங்காதரனை காணோம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு ஆணை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் இது. அடுத்து 8 மணிக்கு கண்ணம்மா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.
இது வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை. 8.30 மணிக்கு ஹலோ சியாமளா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு இளம்பெண் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய தொடர். 9 மணிக்கு நலம் நலமறிய ஆவல் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. குடும்பங்களில் நடக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை கொண்ட தொடர்.