‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக இப்போதும் இருப்பவர் ராஜேஷ். கன்னி பருவத்திலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ், அதன் பிறகு தனி மரம், தை பொங்கல், நான் நானேதான், அச்சமில்லை அச்சமில்லை, சிறை படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த 7 நாட்கள் படம் அவரை நல்ல குணசித்ர நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு பயணங்கள் முடிவதில்லை, தனிக்காட்டு ராஜா, மெட்டி, தாய் வீடு, ஆட்டோகிராப் உள்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். ஓட்டல் நடத்தினர். சின்னத்திரையிலும் நடித்தார். தாயம், முடிவல்ல ஆரம்பம் தொடர்களில் நடித்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரோஜா என்ற தொடரில் நடிக்கிறார். விபத்தொன்றில் மனைவியையும் மகளையும் இழந்து விட்டு அன்புக்கு தவிக்கிற தந்தையாகவும், அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒரு இளம் பெண்ணுக்கு வக்கிலாகவும் வாழ்கிற கேரக்டரில் நடிக்கிறார்.