ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி |
ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. வித்தியாசமான கதை களத்தை கொண்ட தொடராக இது உருவாகி ஒளிபரப்பாக இருக்கிறது.
சராசரிக்கும் கூடுதலாக குண்டான பெண் ராசாத்தி. அன்பானவள், தைரியமானவள் என்றாலும் தன் மகளின் தோற்றத்தால் அவளுக்கு எப்படி திருமணமாகும், அவள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலை கொள்கிறார் தாயான செண்பகவல்லி. ஆனால் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுகிறது. ராசத்தி கபடி வீரர் இனியனை திருமணம் செய்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் தொடரின் கதை.
இதில் ராசாத்தியாக புதுமுகம் அஸ்வினி நடிக்கிறார், அவரது தாய் செண்பகவல்லியாக சபீதா ஆனந்த் நடிக்கிறார், ராசாத்தி கணவர் இனியனாக வசந்த் நடிக்கிறார். ஆர்.தேவேந்திரன் இயக்குகிறார். ஜானி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.