தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
சரவணன் மீனாட்சி புகழ் செந்தில்-ஸ்ரீஜா ஜோடி மீண்டும் நடித்து வரும் தொடர் மாப்பிள்ளை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இன்னொரு ஜோடியாக நடிப்பவர்கள் கமல்-ஜனனி. இவர்களது ரொமான்ஸ் காட்சிகள் சினிமாவுக்கு இணையாக படமாக்கப்பட்டு வந்தது. முக்கியமாக 5 முத்தக்காட்சிகளில் அவர்கள் நடித்தனர்.
ஆனால் அப்படி நடித்த அவர்களது கதாபாத்திரங்கள் தற்போது எதிரும் புதிருமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, தனது காதலனுக்கே வில்லியாகி விட்டார் ஜனனி. இதேபோல் இன்னும் இந்த மாப்பிள்ளை தொடர் பல அதிரடி திருப்பங்களை சந்திக்க இருக்கிறதாம்.
இதுபற்றி மாப்பிள்ளை கமல் கூறும்போது, இந்த சீரியலில் நடித்தது எனக்கு சினிமாவில் நடித்தது போன்றே இருந்தது. முக்கியமாக, எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஜனனி, முத்தக்காட்சிகள் நடிக்க சம்தம் சொன்னது பெரிய விசயமாக இருந்தது. சீரியல்களில் அந்த மாதிரி நடிக்க பலரும் தயங்கும் நிலையில், அவர் கேசுவலாக எடுத்துக்கொண்டு நடித்தார். அது பெருவாரியான நேயர்களை கவர்ந்தது.
தற்போது அப்படி என்னை உயிருக்கு உயிராக காதலித்த ஜனனியே தற்போது எனக்கு எதிரியாகி விட்டார். இது கதையில் மட்டுமின்றி எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன்பு நடித்த எபிசோடுகளில் ஜனனியின் முகத்தை பார்க்க ஆவலாக இருந்த நான், இப்போது அவரது முகத்தை பார்க்கவே பயப்படுகிறேன். அந்த அளவுக்கு கொடூரமாக விட்டார் அவர்.
மேலும், அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீலி தொடரிலும் சூர்யா என்ற ஒரு துப்பறிவாளன் வேடத்தில் நடிக்கிறேன். மாப்பிள்ளை சீரியலில் இருந்து மாறுபட்ட வேடம். அதனால் இந்த சீரியலுக்காக வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை கமல்.