கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் போன்ற பெரிய பட்ஜெட் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று புதிய புதிய நேரடி தமிழ் தொடர்களுக்கும் முக்கியத்தும் தருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜா ராணி என்ற தொடர்.
புகழ்பெற்ற திரைப்படத்தின் தலைப்புகளை சீரியல்களுக்கு வைப்பது பேஷன் என்பதால் இதற்கு ஆர்யா, நயன்தாரா நடித்த வெற்றிப் படமான ராஜா ராணி தலைப்பு வைத்திருக்கிறார்கள். வருகிற மே மாதம் 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. ஒரு புதிய தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாவது மிகவும் அபூர்வம். அது ராஜா ராணிக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில் வேலைக்காரியாக செல்லும் ஹீரோயினை அந்த வீட்டு செல்லப் பிள்ளையான ஹீரோ காதலிக்கிறார். செல்லப்பிள்ளையின் காதலை மறுக்க முடியாமல் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், மகனை கொண்டே மருமகளை விரட்ட சதி திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டங்களை ஹீரோயின் சாதுர்யமாக எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள். சீரியலின் கேப்சனும் ஒரு பணிப்பெண் மருமகளான கதை என்றே வைத்திருக்கிறார்கள்.