ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் போன்ற பெரிய பட்ஜெட் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று புதிய புதிய நேரடி தமிழ் தொடர்களுக்கும் முக்கியத்தும் தருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜா ராணி என்ற தொடர்.
புகழ்பெற்ற திரைப்படத்தின் தலைப்புகளை சீரியல்களுக்கு வைப்பது பேஷன் என்பதால் இதற்கு ஆர்யா, நயன்தாரா நடித்த வெற்றிப் படமான ராஜா ராணி தலைப்பு வைத்திருக்கிறார்கள். வருகிற மே மாதம் 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. ஒரு புதிய தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாவது மிகவும் அபூர்வம். அது ராஜா ராணிக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில் வேலைக்காரியாக செல்லும் ஹீரோயினை அந்த வீட்டு செல்லப் பிள்ளையான ஹீரோ காதலிக்கிறார். செல்லப்பிள்ளையின் காதலை மறுக்க முடியாமல் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், மகனை கொண்டே மருமகளை விரட்ட சதி திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டங்களை ஹீரோயின் சாதுர்யமாக எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள். சீரியலின் கேப்சனும் ஒரு பணிப்பெண் மருமகளான கதை என்றே வைத்திருக்கிறார்கள்.