தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
இந்தியில் 2011முதல் 2016 வரை ஒளிபரப்பான மெகா சீரியல் தியா ஆர் பாத்தி ஹம். ரோகித் ராஜ் கோயல் என்பவர் இந்த தொடரை இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் தீபிகா சிங். இந்த தொடரில் பணியாற்றி வந்தபோது இயக்குனர் ரோகித் ராஜ் கோயலுக்கும், தீபிகா சிங்கிற்குமிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சீரியல் நிறைவு பெற்றதை அடுத்து கர்ப்பமான தீபிகா சிங்கிற்கு, மே 20-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரோகித் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியில் ஏராளமான ரசிகர் ரசிகைகளை கொண்டுள்ள தீபிகா சிங், அடுத்து மீண்டும் நடிக்க வருவாரா? இல்லை முழுநேர குடும்பத்தலைவியாகி விடுவாரா? என்கிற கேள்விகள் பாலிவுட்டில் எழுந்திருக்கிறது.
மேலும், இந்தியில் தீபிகா சிங் நடித்த தியா ஆர் பாத்தி ஹம் என்ற அந்த தொடர் பின்னர் தமிழில், என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.