மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்தியில் 2011முதல் 2016 வரை ஒளிபரப்பான மெகா சீரியல் தியா ஆர் பாத்தி ஹம். ரோகித் ராஜ் கோயல் என்பவர் இந்த தொடரை இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் தீபிகா சிங். இந்த தொடரில் பணியாற்றி வந்தபோது இயக்குனர் ரோகித் ராஜ் கோயலுக்கும், தீபிகா சிங்கிற்குமிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சீரியல் நிறைவு பெற்றதை அடுத்து கர்ப்பமான தீபிகா சிங்கிற்கு, மே 20-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரோகித் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியில் ஏராளமான ரசிகர் ரசிகைகளை கொண்டுள்ள தீபிகா சிங், அடுத்து மீண்டும் நடிக்க வருவாரா? இல்லை முழுநேர குடும்பத்தலைவியாகி விடுவாரா? என்கிற கேள்விகள் பாலிவுட்டில் எழுந்திருக்கிறது.
மேலும், இந்தியில் தீபிகா சிங் நடித்த தியா ஆர் பாத்தி ஹம் என்ற அந்த தொடர் பின்னர் தமிழில், என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.