மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பாண்டவர் பூமி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி சின்னத்திரைக்கு வந்தவர் ஷமிதா. சிவசக்தி அவரது முதல் சீரியல். கடந்த 8 வருடங்களாக சின்னத்தரை தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார். உடன் நடித்த ஸ்ரீயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இதுவரை பாசிடிவான கேரக்டர்களில் நடித்து வந்த ஷமிதா, தற்போது மவுனராகம் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். அதிக மேக்அப் போட்டு கண்களை உருட்டி மிரட்டி பேசும் வழக்கமான வில்லியாக இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக காரியம் சாதிக்கும் வில்லியாக நடித்து வெளுத்துக்கட்டி வருகிறார்.
"நான் வில்லியாக நடிக்க வேண்டும் என்று என் கணவர் வற்புறுத்தி வந்தார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. இயக்குனர் தாய் செல்வம் இது வழக்கமான வில்லி கேரக்டர் இல்லை. கணவன் மீது உயிரை வைத்திருக்கும் மனைவி, அதற்கு பங்கம் வரும்போது வில்லியாக மாறுவார். அதுவும் கணவன் மீது கொண்ட அதீத அக்கறையால் தான். அதனால் ஓவர் ஆக்டிங், ஓவர் மேக்கப் எதுவும் தேவையில்லை. இயல்பாக நடித்தால் போதும் என்று சொல்லி நம்பிக்கை தந்தார். நானும் அப்படியே நடித்தேன். அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது" என்கிறார் ஷமிதா.