தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
தமிழ்நாட்டுக்குள் இந்தி டப்பிங் சீரியல்களில் ஆதிக்கம் அதிகரித்து விட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிராக சின்னத்திரை கலைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். ஆனபோதும் தமிழ் சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்படவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. அதன்காரணமாக, இந்தி சீரியல்கள் பக்கம் திரும்பியுள்ள தமிழ் சீரியல் நேயர்களை இழுக்கும் முயற்சியாக தற்போது சில சீரியல்கள் பிரமாண்டமாக தயாராகத் தொடங்கியிருக்கிறது.
அதன்முதல்கட்டமாக, நான்கு மொழிகளில் குஷ்பு தயாரித்து வரும் நந்தினி சீரியலைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி என்றொரு நெடுந்தொடர் தயாராகி வருகிறது. கிராமத்து கதையில் உருவாகும் இந்த தொடருக்காக சென்னையில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்தி சீரியலுக்கு இணையாக இந்த தொடரில் காஸ் டியூம்களும் ரிச்சாக பயன்படுத்தப்படுகிறதாம். ஏப்ரல் 24-ந்தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரில் திருமதி தமிழ் தொடரில் நடித்த சஞ்சய் நாயகனாக நடிக்க, அவருடன் பிரபல நடிகர் -நடிகைகள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.