மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி |

பல வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் கர்ணனின் மனைவியாக சிறிய கேரக்டரில் நடித்த கவிதா, அதன் பிறகு தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்து விட்டு தமிழுக்கு திரும்பியிருக்கிறார். நீலி தொடரின் வில்லி அவர்தான்.
மனைவியை இழந்த கணவன் தன் மகள் அபியோடு வசிக்கிறார். மகளுக்கு பிடித்தமான பொம்மை ஒன்றில் இறந்த அம்மாவின் ஆவி இருக்கிறது. அது குழந்தையை பாதுகாத்து வளர்க்கிறது. கணவன் மறுமணம் செய்து கொள்ள.. மனைவியா வந்தவள் குழந்தை அபியை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறாள். அவளிடமிருந்து குழந்தையை பொம்மைக்குள் இருக்கும் அம்மா ஆவி எப்படி காப்பாற்றுகிறது என்கிற கதை. இதில் கொடுமைக்கார சித்தி ரேகாவாக கவிதா நடிக்கிறார்.
"நான் முதன் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன். அதுவும் குழந்தையை கொடுமைப்படுத்தும் கொடுமைக்கார சித்தியாக. நிச்சயம் எனது கேரக்டரை பெண்களுக்கு பிடிக்காது, திட்டி தீர்க்கப்போகிறார்கள். அதுதான் என் நடிப்பின் வெற்றி. தமிழ் சீரியலில்தான் அறிமுகமானேன். மீண்டும் தமிழில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது" என்கிறார் கவிதா.




