நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குற்றம் நடந்தது என்ன? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் புலனாய்வு நிகழ்ச்சி. இதை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வெவ்வேறு பெயர்களில் இது போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தற்போது இதே நிகழ்ச்சி நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற பெயரில் இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. கடந்த 29ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சமீப காலமாக உளவியல் ரீதியான குற்றங்கள் பெருகி வருகிறது. குறிப்பாக பாலியல் தொடர்பான கொலைகள், பேஸ்புக், டுவிட்டர் தொடர்பான கொலைகள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள். இந்த குற்றங்களின் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
"இந்த நிகழ்ச்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட உண்மை சம்பவங்களின் புலன் விசாரணைகளை அடிப்படையாக கொண்டது. இந்த நிகழ்ச்சி மூலம் எந்த ஒரு தீர்வும் அறிவிக்கப்படவில்லை. மற்றும் இந்த நிகழ்ச்சியின் எந்த ஒரு பகுதியையும், காட்சியையும் ஆதாரமாக பயன்படுத்தினால் அதற்கு விஜய் டி.வி பொறுப்பேற்காது. நிகழ்ச்சியின் உள்ளடக்கம், மற்றும் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு விஜய் டி.வி பொறுப்பு" என்று சேனல் அறிவித்துள்ளது.