ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி |
விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குற்றம் நடந்தது என்ன? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் புலனாய்வு நிகழ்ச்சி. இதை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வெவ்வேறு பெயர்களில் இது போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தற்போது இதே நிகழ்ச்சி நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற பெயரில் இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. கடந்த 29ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சமீப காலமாக உளவியல் ரீதியான குற்றங்கள் பெருகி வருகிறது. குறிப்பாக பாலியல் தொடர்பான கொலைகள், பேஸ்புக், டுவிட்டர் தொடர்பான கொலைகள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள். இந்த குற்றங்களின் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
"இந்த நிகழ்ச்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட உண்மை சம்பவங்களின் புலன் விசாரணைகளை அடிப்படையாக கொண்டது. இந்த நிகழ்ச்சி மூலம் எந்த ஒரு தீர்வும் அறிவிக்கப்படவில்லை. மற்றும் இந்த நிகழ்ச்சியின் எந்த ஒரு பகுதியையும், காட்சியையும் ஆதாரமாக பயன்படுத்தினால் அதற்கு விஜய் டி.வி பொறுப்பேற்காது. நிகழ்ச்சியின் உள்ளடக்கம், மற்றும் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு விஜய் டி.வி பொறுப்பு" என்று சேனல் அறிவித்துள்ளது.