ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளம் தலைமுறை காதலர்களாக நடிப்பவர்கள் அன்வரும், சமீராவும். சீரியலில் சீரியசாக காதலிக்கும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலர்களாகி விட்டார்கள்.
தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமீரா 'பகல் நிலவு' மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், அன்வர் தமிழில் ஏராளமான சீரியலில் நடித்தவர். “நான் நடிகர் என்றாலும் சமீராவின் நடிப்புக்கு நான் ரசிகன். ஒரு ஷாப்பிங் மாலில்தான் முதல் முதலில் சந்தித்தோம். பிறகு நண்பர்களானோம் பின்பு அதுவே காதலானது என்கிறார் அன்வர். நிஜ காதலர்களே சீரியல் காதலர்களாக இருப்பதால் காதல் காட்சிகளில் தனி கவனம் செலுத்துகிறது சீரியல் கதை இலாக்கா.