நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ஜீ தமிழ் சேனலில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களிடம் பேட்டி கண்டு வருகிறார் நடிகை குஷ்பு. மற்ற சேனல் பேட்டிகளில் இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக சில புதுமைகளையும் அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில புதுமைகளையும் செய்து வருகிறார்.
குறிப்பாக, வருகிற சனிக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கும் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் மாதவனிடம் பேட்டி எடுக்கும் அவர், அலைபாயுதே படத்தில் ஷாலினியிடம் அவர் பேசிய, நான் உன்னை விரும்பல, எம் மேல ஆசைப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு என்ற வசனத்தை மாதவன் மீண்டும் பேச வைத்து கேட்பதோடு, அவரிடம் சென்று கன்னத்தில் ஒரு முத்தமும் பெறுகிறார். இதை ப்ரமோ தற்போது வெளியாகி வரும் நிலையில், குஷ்புவும் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.