ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
ஜீ தமிழ் சேனலில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களிடம் பேட்டி கண்டு வருகிறார் நடிகை குஷ்பு. மற்ற சேனல் பேட்டிகளில் இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக சில புதுமைகளையும் அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில புதுமைகளையும் செய்து வருகிறார்.
குறிப்பாக, வருகிற சனிக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கும் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் மாதவனிடம் பேட்டி எடுக்கும் அவர், அலைபாயுதே படத்தில் ஷாலினியிடம் அவர் பேசிய, நான் உன்னை விரும்பல, எம் மேல ஆசைப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு என்ற வசனத்தை மாதவன் மீண்டும் பேச வைத்து கேட்பதோடு, அவரிடம் சென்று கன்னத்தில் ஒரு முத்தமும் பெறுகிறார். இதை ப்ரமோ தற்போது வெளியாகி வரும் நிலையில், குஷ்புவும் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.