அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
செல்லமே, முகூர்த்தம், மாதவி உள்பட சில தொடர்களில் நடித்து வருபவர் சோனியா. சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடித்து வரும் இவர், மேற்படி இரண்டு துறைகளிலும் இரண்டு பதவி வகித்து வருகிறார். அதாவது, நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது அதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டு அதில் வென்றார் சோனியா. அதையடுத்து சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோதும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆக, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருகிறார் சோனியா.
இதுபற்றி அவர் கூறுகையில், ''நான் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். தமிழைப்பொறுத்தவரை ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை தொடங்கி சமீபத்தில் வெளியான ஈட்டி வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். அதேபோல் பல மெகா சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதனால் என்னை சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் எல்லோருக்குமே நன்றாக தெரியும். அதனால்தான் இரண்டு சங்க தேர்தல்களிலுமே போட்டியிட்டேன். அப்படி போட்டியிட்டு இரண்டு மீடியாக்களிலும் வெற்றி பெற்றேன். என்னதான், நடிப்பில் பிசியாக இருந்தாலும், பொறுப்பை உணர்ந்து சம்பந்தப்பட்ட பணிகளையும் செவ்வனே செய்து வருகிறேன்'' என்கிறார் சோனியா.