ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்லமே, முகூர்த்தம், மாதவி உள்பட சில தொடர்களில் நடித்து வருபவர் சோனியா. சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடித்து வரும் இவர், மேற்படி இரண்டு துறைகளிலும் இரண்டு பதவி வகித்து வருகிறார். அதாவது, நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது அதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டு அதில் வென்றார் சோனியா. அதையடுத்து சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோதும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆக, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருகிறார் சோனியா.
இதுபற்றி அவர் கூறுகையில், ''நான் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். தமிழைப்பொறுத்தவரை ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை தொடங்கி சமீபத்தில் வெளியான ஈட்டி வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். அதேபோல் பல மெகா சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதனால் என்னை சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் எல்லோருக்குமே நன்றாக தெரியும். அதனால்தான் இரண்டு சங்க தேர்தல்களிலுமே போட்டியிட்டேன். அப்படி போட்டியிட்டு இரண்டு மீடியாக்களிலும் வெற்றி பெற்றேன். என்னதான், நடிப்பில் பிசியாக இருந்தாலும், பொறுப்பை உணர்ந்து சம்பந்தப்பட்ட பணிகளையும் செவ்வனே செய்து வருகிறேன்'' என்கிறார் சோனியா.