நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சின்னத்திரை தொகுப்பாளினி, பண்பலை தொகுப்பாளினி மாடல் அழகி மற்றும் பெரியதிரை நடிகை இப்படி பன்முகங்களை கொண்டவர் ரம்யா. மிகவும் ஜாலியான டைப்பான ரம்யாவுக்கு சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார். இனி மாடலிங் மற்றும், சினிமாவில் தீவிரமா இறங்க முடிவு செய்தார். ஓகே கண்மணி படத்தில் நடித்த அவர் ஒரு ஸ்பா காலண்டருக்கு மாடலாக பணியாற்றி உள்ளார்.
புத்துணர்ச்சியோடு பணிகளை கவனிக்கவும், கவலைகளை மறக்கவும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள மலையடிவாரத்தில் இயங்கும் சித்த வைத்திய ஆஸ்ரமம் ஒன்றில் ஒரு வாரம் தங்கி விட்டு வந்திருக்கிறார். மனதுக்கும், உடலுக்கும் இதம் தரும் சிகிக்சைகள் எடுத்து திரும்பியிருக்கிறார். செல்போன், இண்டர்நெட் எந்த தொடர்பும் இல்லாமல், யாருடனும் பேசாமல் ஆசிரமத்தில் கொடுக்கும் உணவு, தரும் சிகிச்சையை பெற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறார். ரம்யா இப்போது புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை துவங்கி இருக்கிறார்.