சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
சின்னத்திரை தொகுப்பாளினி, பண்பலை தொகுப்பாளினி மாடல் அழகி மற்றும் பெரியதிரை நடிகை இப்படி பன்முகங்களை கொண்டவர் ரம்யா. மிகவும் ஜாலியான டைப்பான ரம்யாவுக்கு சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார். இனி மாடலிங் மற்றும், சினிமாவில் தீவிரமா இறங்க முடிவு செய்தார். ஓகே கண்மணி படத்தில் நடித்த அவர் ஒரு ஸ்பா காலண்டருக்கு மாடலாக பணியாற்றி உள்ளார்.
புத்துணர்ச்சியோடு பணிகளை கவனிக்கவும், கவலைகளை மறக்கவும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள மலையடிவாரத்தில் இயங்கும் சித்த வைத்திய ஆஸ்ரமம் ஒன்றில் ஒரு வாரம் தங்கி விட்டு வந்திருக்கிறார். மனதுக்கும், உடலுக்கும் இதம் தரும் சிகிக்சைகள் எடுத்து திரும்பியிருக்கிறார். செல்போன், இண்டர்நெட் எந்த தொடர்பும் இல்லாமல், யாருடனும் பேசாமல் ஆசிரமத்தில் கொடுக்கும் உணவு, தரும் சிகிச்சையை பெற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறார். ரம்யா இப்போது புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை துவங்கி இருக்கிறார்.