அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சின்னத்திரை தொகுப்பாளினி, பண்பலை தொகுப்பாளினி மாடல் அழகி மற்றும் பெரியதிரை நடிகை இப்படி பன்முகங்களை கொண்டவர் ரம்யா. மிகவும் ஜாலியான டைப்பான ரம்யாவுக்கு சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார். இனி மாடலிங் மற்றும், சினிமாவில் தீவிரமா இறங்க முடிவு செய்தார். ஓகே கண்மணி படத்தில் நடித்த அவர் ஒரு ஸ்பா காலண்டருக்கு மாடலாக பணியாற்றி உள்ளார்.
புத்துணர்ச்சியோடு பணிகளை கவனிக்கவும், கவலைகளை மறக்கவும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள மலையடிவாரத்தில் இயங்கும் சித்த வைத்திய ஆஸ்ரமம் ஒன்றில் ஒரு வாரம் தங்கி விட்டு வந்திருக்கிறார். மனதுக்கும், உடலுக்கும் இதம் தரும் சிகிக்சைகள் எடுத்து திரும்பியிருக்கிறார். செல்போன், இண்டர்நெட் எந்த தொடர்பும் இல்லாமல், யாருடனும் பேசாமல் ஆசிரமத்தில் கொடுக்கும் உணவு, தரும் சிகிச்சையை பெற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறார். ரம்யா இப்போது புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை துவங்கி இருக்கிறார்.