நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா-நானா நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகியிருக்கிறது. ஒரே துறையைச்சேர்ந்த மாற்றுக் கருத்துள்ளவர்களை இரண்டு அணிகளாக உட்கார வைத்து அவர்களிடம் கருத்து கேட்பது. குறிப்பாக, சமூக பிரச்னைகளை அலசும் இந்த நிகழ்ச்சியில் வருகிற பொங்கல் தினத்தன்று விஜய்-அஜீத் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களை எதிரெதிரே உட்கார வைத்து நீயா நானாவை காரசார விவாத மேடையாக்கியிருக்கிறாராம் கோபிநாத்.
இதற்கு முன்பு மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நேயர்களை விட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் தங்களது அபிமான ஹீரோக்களின் அருமை பெருமைகளை அடுக்குமொழியில் அள்ளி விட்டுள்ளார்களாம். அதோடு அவர்களின் விவாதத்தில் ஆவேசம் நிறைந்திருந்தாம். அதன்காரணமாக இதுவரை எந்த நீயா-நானா நிகழ்ச்சிகளுக்கும் இல்லாத அளவுக்கு சூடு பறந்ததாம் விவாதம்.
அதேசமயம் கடைசியில் இரண்டு நடிகர்களைப்பற்றிய தீர்ப்பு சொல்லப்படும்போது, அவர்களின் ப்ளஸ் பாய்ண்டுகளையும், அவர்கள் ரசிகர்களை எந்தெந்த வகையில் கவர்ந்துள்ளார்கள் என்பதையும் அழகாக சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறார்களாம்.