நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா-நானா நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகியிருக்கிறது. ஒரே துறையைச்சேர்ந்த மாற்றுக் கருத்துள்ளவர்களை இரண்டு அணிகளாக உட்கார வைத்து அவர்களிடம் கருத்து கேட்பது. குறிப்பாக, சமூக பிரச்னைகளை அலசும் இந்த நிகழ்ச்சியில் வருகிற பொங்கல் தினத்தன்று விஜய்-அஜீத் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களை எதிரெதிரே உட்கார வைத்து நீயா நானாவை காரசார விவாத மேடையாக்கியிருக்கிறாராம் கோபிநாத்.
இதற்கு முன்பு மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நேயர்களை விட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் தங்களது அபிமான ஹீரோக்களின் அருமை பெருமைகளை அடுக்குமொழியில் அள்ளி விட்டுள்ளார்களாம். அதோடு அவர்களின் விவாதத்தில் ஆவேசம் நிறைந்திருந்தாம். அதன்காரணமாக இதுவரை எந்த நீயா-நானா நிகழ்ச்சிகளுக்கும் இல்லாத அளவுக்கு சூடு பறந்ததாம் விவாதம்.
அதேசமயம் கடைசியில் இரண்டு நடிகர்களைப்பற்றிய தீர்ப்பு சொல்லப்படும்போது, அவர்களின் ப்ளஸ் பாய்ண்டுகளையும், அவர்கள் ரசிகர்களை எந்தெந்த வகையில் கவர்ந்துள்ளார்கள் என்பதையும் அழகாக சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறார்களாம்.