ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா-நானா நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகியிருக்கிறது. ஒரே துறையைச்சேர்ந்த மாற்றுக் கருத்துள்ளவர்களை இரண்டு அணிகளாக உட்கார வைத்து அவர்களிடம் கருத்து கேட்பது. குறிப்பாக, சமூக பிரச்னைகளை அலசும் இந்த நிகழ்ச்சியில் வருகிற பொங்கல் தினத்தன்று விஜய்-அஜீத் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களை எதிரெதிரே உட்கார வைத்து நீயா நானாவை காரசார விவாத மேடையாக்கியிருக்கிறாராம் கோபிநாத்.
இதற்கு முன்பு மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நேயர்களை விட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் தங்களது அபிமான ஹீரோக்களின் அருமை பெருமைகளை அடுக்குமொழியில் அள்ளி விட்டுள்ளார்களாம். அதோடு அவர்களின் விவாதத்தில் ஆவேசம் நிறைந்திருந்தாம். அதன்காரணமாக இதுவரை எந்த நீயா-நானா நிகழ்ச்சிகளுக்கும் இல்லாத அளவுக்கு சூடு பறந்ததாம் விவாதம்.
அதேசமயம் கடைசியில் இரண்டு நடிகர்களைப்பற்றிய தீர்ப்பு சொல்லப்படும்போது, அவர்களின் ப்ளஸ் பாய்ண்டுகளையும், அவர்கள் ரசிகர்களை எந்தெந்த வகையில் கவர்ந்துள்ளார்கள் என்பதையும் அழகாக சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறார்களாம்.